Saturday, January 29

செரியன் நகரில் மாணவர் எழுச்சி

                 வடசென்னை மாவட்டம்-ஆர்.கே நகர் பகுதி 4-வது வட்டம் தமுமுக மாணவர் அணி  சார்பாக செரியன் நகரில் மாணவர் எழுச்சி பொதுக்கூட்டம் 09-01-2011 அன்று நடைபெற்றது.

இந்த மாபெரும் எழுச்சி கூட்டத்திற்கு  4வது வட்ட மாணவரணி செயலாளர் A.அயூப்கான் தலைமை வகித்தார். 4வது வட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் & மதரசா  ஆசிரியர்   S.அப்துல் அஜீஸ் இறைஉரை ஆற்றி பின்பு   இளைஞர் அணி செயலாளர் S.பீர் முகம்மது, வரவேற்புரையாற்றினார்.

பிறகு மாவட்ட மாணவரணி செயலாளர் - S.அப்துல் வகீல்,பகுதி மாணவரணி செயலாளர் - A.அப்துல் ரசாக்,இஸ்லாம் & மாணவர்களின் பணிகள் பற்றி உரையாற்றினர்.
பிறகு மாவட்ட தலைவர் F. உஸ்மான் ,R.K.நகர் பகுதி தலைவர் I.S.ஹமீது, பகுதி செயலாளர் S.ஜமாலுதீன்,  வட்ட உலமா அணி செயலாளர் S.ரியாசுதீன், ம ம க வட்ட செயலாளர் R.அப்துல் கதீர் ஆகிய நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.


                    இந்நிகழ்ச்சியின் முக்கிய & சிறப்பு உரையாக மாநில மாணவரணி செயலாளர் Adv M. ஜைனுல் ஆபிதீன், இந்திய அரசியலும், மாணவர்களும் என்ற தலைப்பிலும்,






மாநில  மாணவரணி பொருளாளர் - மாயவரம் M.அமீன் கல்வியும், சமூகமும் என்ற தலைப்பிலும் மிக எழுச்சியுடம் உரையாற்றினர்.





இந்நிகழ்ச்சியில் செரியன் நகரின் 40 மாணவ சிங்கங்கள்  உள்பட  முன்னூறு க்கும் அதிகமான மாணவர்கள்,பொது மக்கள்,பெண்கள்  இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


 இந்நிகழ்ச்சியின் மிக முக்கிய சிறப்பம்சம் 40 மாணவ சிங்கங்களும் ஒரே சீருடையில் களப்பணி ஆற்றியது மிகவும் பிரம்மாண்டமாய் அமைந்தது .. 







 
எல்லா  புகழும் இறைவனுக்கே ............................