Monday, February 6

மருத்துவ சேவை அணி சார்பாக இரத்த தான முகாம்

கடந்த 26-01-2012 குடியரசு தினத்தை முன்னிட்டு, 39வது வட்ட மருத்துவ சேவை அணி சார்பாக ஸ்டான்லி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சகோ: S.அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார்.மேலும் A.கலீலுர்ரஹ்மான் (மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்) & N.மஹபூப்பாஷா (R.K நகர் பகுதி மருத்துவ சேவை அணி செயலாளர்) முன்னிலை வகித்தனர்.

இம்முகாம் செரியன் நகரில் உள்ள த.மு.மு.க அரபி மத்ரஸாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் S.ஹைதர் அலி அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும் மாநில செயலாளர் P.S. ஹமீது, மாவட்ட தலைவர் F.உஸ்மான் அலி மற்றும் வடசென்னை மாவட்ட, R.K. நகர் பகுதி,கிளை யின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம்முகாமில் சுமார் 70 பேர் இரத்த தானம் செய்தனர்.இதை சிறப்பாக நடத்திட உதவிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.