Tuesday, January 31

த.மு.மு.க முயற்சியால் மதுக்கடை மூடல்

இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த பத்து ஆண்டுகளாக செரியன் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள தேசிய நகர்,அஷோக் நகர்,தனபால் நகர், கண்ணுபிள்ளை தெரு , பொன்னுசாமி தெரு, வீர ராகவன் சாலை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக TASMAC மதுக்கடை, த.மு.மு.க வின் முயற்சியால் மூடப்பட்டது.

எங்கள் வட்டத்தின் சார்பாக பல முறை CMDA,JC, மற்றும் பல உயரதிகாரிகளுக்கு கடிதம்,மனு கொடுத்தும் பதில் வரவில்லை. குடிகாரர்களின் அட்டகாசம் பெருகிய நிலையில் த,மு.மு.க வின் அறிவுரையின் பேரில் கடந்த 27-12-2011 அன்று செரியன் நகர் ஊர் நிர்வாக தலைமையில் எல்லா பொதுமக்களும்,பெண்களும்,சிறுவர்களும் T.H. ரோட்டில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் சுமார் 2 மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பிறகு இணை கமிஷ்னர் வந்து , இனி மதுக்கடை இங்கு வராது என்று வாக்களித்தார்.














அதன் பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.


No comments:

Post a Comment